"பெருமழையை சமாளிக்கும் வகையில் வடிகால் பணிகள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

x

"பெருமழையை சமாளிக்கும் வகையில் வடிகால் பணிகள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை மாநகராட்சியின் 5ம் மண்டலத்திற்கு உட்பட்ட என்.எஸ்.சி. போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, 6ம் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாநகராட்சி அதிகாரிகளுடன் வடிகால் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறைந்தபட்சம் இன்னும் 15 நாட்களில் வடிகால் பணிகள் முடிவுபெறும் எனக் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்