பீகார் முதல்வருடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு | BIHAR | DMK | TR BALU

x

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து பேசினார்...

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், காவல்துறை தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அவரை சந்தித்த டி.ஆர்.பாலு, பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து, அது தொடர்பான விரிவான அறிக்கையினை வழங்கினார். மேலும், பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்