சொத்துகளை பகிர்ந்து கொள்வதில் தகராறு - இரு குடும்பத்தினரிடையே மோதல்

பழனியில் சொத்து பிரச்சனையில் இரு குடும்பத்தினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி திண்டுக்கல் சாலையில் சிவகிரி பட்டி என்ற இடத்தில் காளிமுத்து, சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகள் உள்ளன. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலயில், சொத்துகளை பகிர்ந்து கொள்வதில் அவர்களின் வாரிசுகளுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com