திண்டுக்கல்லில் 160 சவரன் நகை கொள்ளை - சம்பவத்தில் வடமாநில இளைஞர் கைது

x
  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அலுவலர்கள் குடியிருப்பில், வீடுகளின் பூட்டை உடைத்து 160 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • திருநாவுக்கரசு என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, வீட்டு கதவின் பூட்டை உடைத்து, 160 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
  • அதே போல், அருகிலிருந்த வீடுகளிலும் பணம் திருடுபோனது.
  • இதுதொடர்பான விசாரணையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாயா மெர்சிங் பாப்ரியா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்