அரிய வகை நோயால் பள்ளி மாணவி பாதிப்பு... வற்றாத திறமை... வறுமையால் வாடும் அவலம் - தாய் உருக்கமான வேண்டுகோள்

x
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சென்ட்ரல்சினிமா வீதியை சேர்ந்த பிரபாகரன் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
  • இவரது மனைவி கெளரி, வீட்டில் இருந்தபடியே ஒயர் கூடை பின்னி, அதில் சொற்ப வருமானத்தை ஈட்டி வருகிறார்.
  • இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. 2-வது மகள் பவிஷா, நத்தம் - தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
  • பவிஷா பிறப்பில் இருந்தே இடதுகாலில் பிரைமரி நிப்போட்டிமா என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
  • சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாதம் ஒருமுறை சிகிச்சைக்காக வந்தும் இதுவரை நோய் குணமடையவில்லை.
  • முழுமையாக சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக மருந்துகள் தேவைப்படும் நிலையில், அரசு உதவ வேண்டுமென உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்