"மினிமம் பாலன்ஸ் வைக்காதவர்களுக்கு எதுக்கு ATM கார்ட்..என்ன வெங்காயம் ட்ரான்ஸாக்ஷன்...?"தீயாய் பரவும் பேங்க் மேனேஜர் வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஏடிஎம் கார்டு கேட்டு வந்த வாடிக்கையாளரை, வங்கி மேலாளர் தரக்குறைவாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேட்டுப்பட்டியை சேர்ந்த உமாபதி என்பவர் வடமதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இதனிடையே, ஏடிஎம் கார்டு மற்றும் பாஸ்புக் தொலைந்து விட்டதாக கூறி கடந்த மாதம் வங்கியில் அதற்கான பணத்தை கட்டி விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை வழங்கப்படாததால், வ​ங்கிக்கு நேரடியாக வந்து கேட்டுள்ளார். அப்போது, வங்கியின் மேலாளர், கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது?. மினிமம் பேலன்ஸ் வைக்க முடியாத உங்களுக்கெல்லாம் எதற்கு ஏடிஎம் கார்டு என கடுமையாக பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்