மாணவியை கேலி செய்து அவர் தாயையும் துரத்தி துரத்தி அடித்த இளைஞர்கள்.. "பெரிய ஹீரோயினா நீ-ன்னு கேக்குறாங்க போலீஸ்" குமுறும் மாணவி - தர்மபுரியில் அதிர்ச்சி

x
  • தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சட்ட கல்லூரி மாணவியை கேலி செய்ததுடன் அவரையும், அவருடைய தாயாரையும் சில இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • அரூரை அடுத்த கம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகள் சரண்யா, சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
  • இவர் கல்லூரி முடிந்து முத்தானூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு செல்லும்போது, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்த மாணவியை கேலி செய்ததாகத் தெரிகிறது.
  • இதனால் கோபமடைந்த மாணவி, அவர்களைத் தட்டிக்கேட்டபோது அந்த இளைஞர்கள் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
  • தகவல் அறிந்து வந்த மாணவியின் தாயார் மற்றும் உறவினர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
  • தகவல் அறிந்து வந்த போலீசார், இரு கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் முன்னிலையிலேயே உள்ளூர் இளைஞர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்