யானையை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறை... கரும்பு தோட்டத்தில் தீ பற்றியதால் பரபரப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

x
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் போது, கரும்பு தோட்டம் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது.
  • பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியல் ஈடுபட்ட போது, கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பற்றியது.
  • மள மளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது.
  • இதில், 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீக்கிரையான நிலையில், வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்