"பிசுறே இல்லாத தர்ம யுத்தம்..இந்தியாவே திரும்பி பார்க்கும்" - ஓபிஎஸ் அதிரடி பேச்சு

x

"பிசுறே இல்லாத தர்ம யுத்தம்..இந்தியாவே திரும்பி பார்க்கும்" - ஓபிஎஸ் அதிரடி


அப்போது பேசிய அவர், அமைப்பு ரீதியிலான தேர்தலில் தொண்டர்களுக்கான உரிமையை எம்ஜிஆர், ஜெயலலிதா வழங்கியதாக தெரிவித்தார். ஆனால், இன்று சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று, எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மதிக்காமல் புதிய சட்டம் உருவாக்கி, தேர்தலை நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மீண்டும் தொடங்கிய தர்ம யுத்தம் எந்தவித பிசுறும் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், இறுதியில் வெற்றி அடைய போகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வரும் 24ஆம் தேதி நடைபெறும் மாநாடு அதற்கு முன்னுரை எழுதும் கூட்டமாக இருக்க வேண்டும் என்ற ஓபிஎஸ், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பலத்தை காட்ட வேண்டும் என்றார். ச‌சிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து பயணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்