சாலை தடுப்பு சுவர் மீது பைக் மோதி கோர விபத்து - ஸ்பாட்டிலேயே 2 பேர் துடிதுடித்து பலி | Dharapuram

x

தாராபுரம் அருகே சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாராபுரம் கொட்டமுத்தம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாரும், தெலுங்கானாவைச் சேர்ந்த மனோஜ் விஸ்வநாதாச்சாரியும், தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நஞ்சியம்பாளையம் பாலம் அருகே வந்தபோது, அவர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்