நடிகர் தனுஷை மகன் என உரிமைக்கோரிய வழக்கு - நீதிபதி திடீர் உத்தரவு...

x
  • நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரி மேலூர் கதிரேசன் தொடர்ந்த சீராய்வு மனு, வேறு அமர்வுக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  • மேலூர் கதிரேசன் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக உயர்நீதிமன்றமே கூறிய நிலையில், எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
  • இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்த போது, தான் பதிவாளராக இருந்த போது தனுஷை விசாரணை செய்ததால், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்