தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கு.. தடை போட்ட சென்னை உயர் நீதிமன்றம்

x
  • வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம் பெறாததாக கூறி, வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
  • இதற்கு தடை விதிக்க கோரி, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
  • இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வழக்கை ரத்து செய்வது தொடர்பான வாதங்களை முன் வைத்தார்.
  • அதனை ஏற்ற நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்