1,000 கி.மீ. படகில் பயணித்து சாதனை... பெண் காவலர்களை வரவேற்று, பதக்கங்கள் வழங்கி பாராட்டிய டிஜிபி

x

சென்னையில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரம் தாரங்கம்பாடி வரை சென்று இன்று சென்னை துறைமுகம் திரும்பிய பெண் காவலர்களை, டிஜிபி சைலேந்திரபாபு வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி, அவர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து பொறுப்புகளிலும் வகித்து வருகிவதாக பெருமிதம் தெரிவித்தார். வரும் காலங்களிலும் பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். படகு சவாரி பிரிவு ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்த அவர், அதன் மூலம், பெண் காவலர்கள் தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றார். தஞ்சாவூர், மயிலாடுதுறையில் சயனைடு விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிஜிபி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்