விமர்சையாக நடைபெற்ற சப்தஸ்தான விழா - கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்

x

திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் சப்தஸ்தான விழா விமர்சையாக நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ளது ஐயாரப்பர் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் சப்தஸ்தான விழா, நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குளும் திருவையாறு வீதிகளில் உலா வந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்