உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் - 7 பேருக்கு வழங்கப்படும் உடல் உறுப்புகள்

x

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 20-ஆம் தேதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஓசூரில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

பிரபாகரன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.

இதையடுத்து, பிரபாகரனின் உடலிலிருந்து நுரையீரல், கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு வழங்கப்படவுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த ஒருவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் எல்லோரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்