அதிமுக MLA-க்கு கொலை மிரட்டல்.. பின்னணியில் யார்? - போலீஸ் விசாரணை | ADMK | Threat | Chennai

x

அ.தி.மு.க எம்.எல்.ஏ. ரவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ரவி, திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் தங்கி, சட்டமன்றத்திற்கு சென்று வருகிறார். கடந்த 23-ம் தேதி, தனது அறையில் அவர் ஓய்வு எடுத்தபோது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆபாச வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அயனாவரத்தை சேர்ந்த விவேக் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் மிரட்டியது தெரியவந்தது. இவர்கள் இருவரின் அரசியல் பின்னணி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்