அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு, ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியல் | Hosur

x

ஓசூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேகேப்பள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கணேஷின் மனைவி சத்யாவுக்கு சனிக்கிழமை அதிகாலை சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது கருவிகளை பயன்படுத்தியதால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த குழந்தை உயிரிழந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும், வட்டாட்சியரும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்