'பஸ்'கம்பியை பிடித்து தொங்கி ஆபத்து பயணம்...மாணவர்களின் அட்டகாசத்தால் மக்கள் அவதி - போலீசார் கொடுத்த அதிரடி எச்சரிக்கை

x

சென்னையில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராயபுரம் பகுதிக்குட்பட்ட சூரிய நாராயண சாலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள், பேருந்தில் தொங்கியபடியும், கம்பியை பிடித்துக் கொண்டும், சாலையில் உரசிய படியும் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பாரிமுனையில் இருந்து எண்ணூர் நோக்கி செல்லும் பேருந்திலும், மாணவர்கள் பேருந்நில் தொங்கியபடி பயணித்துள்ளனர். இதுக்குறித்து பெற்றோர்கள் கவனித்தில் கொள்ளவேண்டும் எனவும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்