"கூவம் நதி லண்டனுக்கு இணையாக மாற்றப்படும்" ..அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

x

மழைக்காலம் முடிந்தவுடன் கூவம் நதி சீர் செய்யப்பட்டு லண்டனுக்கு இணையாக சென்னை கூவம் நதி மாறும் என்று

அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூரில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்