தொடர் மழை எதிரொலி - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

x

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான மழை இல்லாவிட்டாலும் கூடலூர், முதுமலை, பந்தலூர், தேவாலா, சேரம்பாடி, நடுவட்டம், தேவர் சோலை போன்ற பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இன்று மழையுடன் சேர்த்து காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழும் ஆபத்து உருவாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்