காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார்... பள்ளி ஆசிரியை அளித்த புகாரால் நடவடிக்கை

x

பாலியல் புகாரை வாபஸ் பெற காங்கிரஸ் எம்.எல்.ஏ. 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியதாக கேரள பள்ளி ஆசிரியை குற்றம்சாட்டியுள்ளார்.

பெரும்பாவூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் எல்தோஸ் மீது, திருவனந்தபுரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், எல்தோஸ் மீது ஜாமினில் வெளிவர முடியாதப்படி கோவளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்தோசுடன் தனக்கு 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக மிகவும் நெருங்கி பழங்கி வந்ததாகவும் தெரிவித்தார். எல்தோசின் மோசமான நடவடிக்கையால் அவரை விட்டு விலங்கியதாக கூறிய ஆசிரியை, தன்னை எம்.எல்.ஏ. அடித்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாலியல் புகாரை திரும்ப பெற 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியதாக எல்தோஸ் மீது குற்றம்சாட்டினார். ஆசிரியையின் இந்த புகாரை தொடர்ந்து எம்.எல்.ஏ. எல்தோஸ் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்