அரசு மகளிர் பள்ளி மைதானத்தில் ஆணுறை பாக்கெட்டுகள் - கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி மைதானத்தில், காண்டம் பாக்கெடுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில், சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளிக்கு எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, காண்டம் பாக்கெடுகள் கிடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் வந்து மைதானத்தை சுத்தப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, பழுதடைந்துள்ள மைதானத்தின் கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்