"தியாகராய கல்லூரிக்கு ஜே..!, தியாகராய புள்ளிங்கோ ஜே..!" - பஸ் டாப்பில் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை - வெளியான பரபரப்பு வீடியோ

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், தியாகராய கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பானது. நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள், வள்ளலார் நகர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்தின் கூரை மீது ஏறி, "தியாகராய கல்லூரிக்கு ஜே..!, தியாகராய புள்ளிங்கோ ஜே..!" என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், வண்ணாரப்பேட்டை போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்