ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் - குதிரையுடன் வந்து காப்பாற்றிய கடவுள்

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள், சகமாணவரின் பிறந்தநாளை கொண்டாட மாமல்லபுரம் சென்றுள்ளனர். அப்போது கடலில் குளித்த 3 மாணவர்கள், ராட்சத அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிருக்கு போராடினர். இதையடுத்து அங்கு குதிரை சவாரி ஓட்டும் தேசிங்கு என்பவர், கடலில் குதித்து உயிருக்கு போராடிய 3 மாணவர்களையும், தலைமுடியை பிடித்து இழுத்து கரைக்கு இழுத்துச்சென்று காப்பாற்றினார். பின்பு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தனது உயிரை துச்சமாக கருதி மாணவர்களை காப்பாற்றிய குதிரை சவாரி ஓட்டும் ஊழியரை பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்