கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் : உயிரிழந்த ஜமேஷாவின் உறவினர் அப்சர்கான் வீட்டில் தீவிர சோதனை

x

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமேசா முபினின் நெருங்கிய உறவினரான அப்சர்கான் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதுடன் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த வழக்கில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் உறவினர் அப்சர் கானை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்சர் கானிடம் இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பிற்பகல் போலீசார் அப்சர்கானின் வீட்டை சோதனையிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினியை கைப்பற்றினர். மேலும் அப்சர்கானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஜமேஷா முபின் யாரிடமெல்லாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாரோ அவர்களை எல்லாம் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்