கோவையில் கார் வெடித்த சம்பவம் - காவல் துறைக்கு பல உத்தரவுகளை பிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்

x

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த விசாரணை மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள், வழக்கின் தற்போதைய நிலை,

பாதுகாப்பினை உறுதி செய்வது என காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை செய்திட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரின் பாதுகாப்பை வலுப்படுத்திட கரும்புக்கடை சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 பகுதிகளில் புதிய காவல்நிலையங்களை உடனடியாக அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது போன்றசம்பவம் வருங்காலங்களில் நிகழாமல் தடுக்க சிறப்பு படையை உருவாக்கிடவும், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நவீன கண்காணிப்பு கேமிராக்களை விரைவில் பொருத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மாநிலத்தின் உளவுப்பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்கள் நியமனம் செய்திடவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை பற்றியும் அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கி ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்