தகர கொட்டகையில் வகுப்பு - உருகும் வெயிலில் மயங்கி விழும் குழந்தைகள் - ஆசிரியரின் உருக்கமான கோரிக்கை

x

கரூர் கிருஷ்ணராயபுரம் கட்டளை பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகே இயங்கி வருகின்றன. ஆரம்பப்பள்ளி கட்டடம் மிகவும் சிதிலமடைந்துள்ள நிலையில், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அங்கு படிக்கும் 76 குழந்தைகளும் அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல் தளத்தில் தகரக் கொட்டகை அமைத்து அமர வைக்கப்பட்டுள்ளனர். வெயில் தாங்காமல் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில், ஆரம்பப் பள்ளிக்கு உரிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்