விடுதியில் தகாத உறவில் திருமணமான பெண்...தலைக்கேறிய போதையில் பெண் செய்த செயல் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

x
  • சென்னை அருகே தகாத உறவால் விடுதியில் மர்மமான முறையில் நபர் உயிரிழந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • சென்னை பெரம்பூரை சேர்ந்த பிரகாஷ், பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் பிரியா என்பவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
  • இதில், திடீரென பிரகாஷ் உயிரிழந்ததாக விடுதி மேலாளரிடம் பிரியா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இது குறித்து விடுதி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரகாஷின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர்.
  • இதையடுத்து, பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரியாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், பிரகாஷுடன் தகாத உறவில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
  • சம்பவத்தன்று, விடுதியில் அறை எடுத்து தங்கி இருவரும் மது அருந்தியுள்ளனர்.
  • அப்போது, பிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி பிரகாஷ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
  • இதனால், ஏற்பட்ட மோதலில் பிரியா தாக்கியதில் பிரகாஷ் உயிரிழந்தது தெரியவர, பிரியாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்