இரவில் ஊருக்குள் புகுந்த மர்ம கும்பல்... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம் - சரிந்து விழுந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

x
  • சரித்திர பதிவேடு குற்றவாளிகளான புழல் என்.எஸ்.கே நகரைச் சேர்ந்த ரிதனும், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த விஜயும் கூட்டாளிகள்...
  • நேற்று இரவு விஜய் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து வெட்டியுள்ளது...
  • விஜய் தப்பி ஓடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டார்...
  • அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்த அந்த கும்பல், எதிரே வந்து கொண்டிருந்த ரிதனையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது...
  • அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சை அழைத்து இருவரையும் மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு ரிதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • படுகாயம் அடைந்த விஜய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
  • போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்...
  • முன் விரோதம் காரணமாக கொலையா அல்லது வேறு காரணமா என அனைத்துக் கோணங்களுல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Next Story

மேலும் செய்திகள்