சென்னையில் 3 கிலோ தங்கத்தோடு தோழியிடம் பேசி கொண்டிருந்தவர் கடத்தல் - விவகாரத்தில் திடீர் திருப்பம்..

x
  • சென்னையில் 3 கிலோ தங்கத்தை பறித்து சென்றதாக கடத்தல் நாடகமாடிய ஊழியர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சென்னை நொளம்பூரில் உள்ள நகைக்கடை ஊழியர்களான ஆசிக், அந்தோணிராஜ் மற்றும் சுபாஷ் ஆகியோர் நேற்று இரவு 3 கிலோ தங்க நகைகளை வாங்கி கொண்டு காரில் அண்ணாநகர் ரவுண்டானா அருகே வந்தனர்.
  • அப்போது தோழியிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொகுசு காரில் வந்த மர்ம கும்பல், மூவரையும் கடத்தியதாகவும், பெண் தோழியை அம்பத்தூரிலும், மற்ற இருவரை தாக்கி நகைகளை பறித்து கொண்டு நொளம்பூர் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றதாகவும் அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் ஊழியர்களே கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமானது.
  • இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்