சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. துப்பாக்கி குண்டுடன் வந்த பீகார் இளைஞர் - சுற்றி வளைத்த போலீஸ்

x

சென்னை விமானநிலையத்தில் பீகார் இளைஞரின் கைப்பையிலிருந்து, துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை விமானநிலையத்தில், புனேவுக்கு செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது பீகாரை சேர்ந்த விஷால் சிங் என்பவரின் கைப்பையில், துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விஷால் சிங்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர், தனது தந்தை சி.ஆர்.பி.எப்.பில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், அவரது கைப்பையை தான் தவறுதலாக எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் விஷால் சிங் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அவரது தந்தைக்கும் தகவல் அளித்த அவர்கள், விஷால் சிங்கை எச்சரித்து, அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்