25 ஆண்டுகளுக்கு பிறகு... மேளதாளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. - திருத்தேரை வரவேற்ற பட்டியலின மக்கள்

x
  • செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் கோவில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக செல்லாமல் இருந்தது.
  • இதுகுறித்து திருப்போரூர் கவுன்சிலர் பாரதி சமரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், படவேட்டம்மன் கோவில் தெருவுக்குள் தேர் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.
  • அதன்படி, மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்துக்குமாரசாமி தேர், படவேட்டம்மன் கோயில் தெருவுக்குள் சென்றது. அந்த தேரை, அப்பகுதி மக்கள் மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, பூக்களை தூவி வரவேற்றனர்.
  • பல ஆண்டுகளுக்கு பின்பு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்