ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட 3 கார்கள்.. விரைந்து வராத காவல் துறையினர் - பரபரப்பு சம்பவம்

x

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் லேசான காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போக்குவரத்து காவல்துறையோ, சுங்கச்சாவடி மீட்பு குழுவோ உடனடியாக வராததால், சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு தாமதமாக வந்த காவல் துறையினரிடம், அங்கிருந்த வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்