"மேற்கு வங்கத்தில் சிஏஏ சட்டம்..“ - "அரசை கவிழ்க்க சதி"- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி..!

x

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையோ குடிமக்கள் பதிவேட்டையோ அமல்படுத்த விட மாட்டேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தரப்பிரதேசத்தில் என்கவுன்டர்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக மாறி விட்டதாக கூறினார். அதற்கு எதிராக உத்தரப் பிரதேசம் மக்கள் போரிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் நாட்டை பாதுகாக்காமல், அரசை கவிழ்க்க சதி செய்வதாக குற்றம் சாட்டிய மம்தா பேனர்ஜி தனது அரசு 2025 க்கு முன்பாகவே கவிழ்ந்து விடும் என மிரட்டிய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்