திடீரென தலைகுப்புற கவிழ்ந்த பஸ்... டாப்பில் பயணித்தவர்கள் சிக்கி நசுங்கிய...பதற வைக்கும் காட்சி...

x

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்தாமான் மாவட்டத்தில், பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி வெளியாகியுள்ளது. பர்தாமானில் இருந்து சென்ற பேருந்தில் அதிக கூட்டம் இருந்த‌தால், பலர் கூரை மீது அமர்ந்திருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த‌ போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த‌து. அப்போது, மேற்கூரையில் இருந்தவர்கள் மீதும் பேருந்து தலைக்குப்புற விழுந்த‌தால் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேருந்து கவிழ்ந்து விழும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்