ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தயாராகும் காளைகள் -மாடு பிடி வீரர்கள்-தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

x

மதுரை அருகே காளைகளும், மாடு பிடி வீரர்களும், ஜல்லிகட்டு போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். தைப்பொங்கலை முன்னிட்டு விரைவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ளதையொட்டி, மதுரை மாவட்டம் துவரிமானில் காளைகளும், மாடு பிடி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைகையாற்றங்கரையோரம் வாடிவாசம் அமைத்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர்கள், பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்காமல் தடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்