பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டி காலணியால் அடித்த கொடூரம்...உடம்பு முழுக்க எழும்பிய காயம்

x

கேரள மாநிலம், பாலக்காடு அருகே பணம் மற்றும் மாம்பழங்களை திருடியதாக, பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாலக்காடு எருத்தம்பட்டியில் மாம்பழம் மற்றும் பணத்தை திருடியதாக, 17 வயது பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் பரமசிவம் என்பவரும் அவருடைய மனைவி ஜோதிமணி, மகன் வசந்த் ஆகிய மூவரும் சேர்ந்து அந்த சிறுவனை காலணி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவன், சித்தூர் தாலுகா மருத்துவமனையிலும், பின்னர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சம்பவம், சாதி வன்முறையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள போலீசார், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்