கோயிலுக்கு ஆட்டோவில் வந்த குடும்பத்தை ஊரே அடித்த கொடூரம் - ஊசலாடும் 10 வயது சிறுமி உயிர்

x

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள கோவில்களில் தொடர்ச்சியாக மர்மநபர்கள் ஆட்டோவில் வந்து கொள்ளையடித்து செல்வதாக தகவல் வெளியாகியது.

இதனால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சற்று விழிப்புணர்வுடனே வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஒரு குடும்பத்தினர் விருத்தாசலத்தில் இருந்து கீரனூருக்கு சாமி தரிசனம் செய்ய ஆட்டோவில் வந்துள்ளனர்.

சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் கோவில் உள்ள பித்தளை தட்டு மற்றும் சில பாத்திரங்களை எடுத்து செல்வதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஆட்டோவை துரத்தி சென்ற அப்பகுதி இளைஞர்கள் ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமி உட்பட 6 பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்