திண்டுக்கல்லில் திடீரென மூடப்பட்ட பாலம்... அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..

x

திண்டுக்கல்லில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த பாலத்தை, திறக்ககோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலகிருஷ்ணாபுரத்தில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் 95 சதவீதம் முடிந்த நிலையில், சிறிய பகுதியில் மட்டும் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. இதனை சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பாலத்தை முன்னறிவிப்பின்றி நெடுஞ்சாலை துறையினர் மூடினர். இதனால், பொதுமக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்