வடமாநிலங்களில் பாஜகவினர் போராட்டம் - பாகிஸ்தான் அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு

x

பிரதமர் மோடியை விமர்சித்ததால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிராக வடமாநிலங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவு அளித்தத்தாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐ.நா. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அமைச்சர் பிலாவால் புட்டோ சர்தாரி, பிரதமர் மோடியை குஜராத் கலவரத்தில் தொடர்பு படுத்தி பேசி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பாஜகவினர் மும்பை, மகாரஷ்டிரா, புனே, டெல்லி, புவனேஷ்வர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்ற அவர்கள், பாகிஸ்தான் அமைச்சரின் புகைப்படம் மற்றும் உருவ பொம்மையை கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்