நகை பிரியர்களுக்கு பெரிய ஷாக்! - முதன்முறையாக ரூ44 ஆயிரத்தை தாண்டிய தங்க விலை

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாயாக அதிகரித்து, 44 ஆயிரத்து 480 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30 பைசா அதிகரித்து, 74 ரூபாய் 40 பைசாவாக விற்பனையாகிறது. அமெரிக்க வங்கித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், சர்வதேச முதலீடுகள் பங்கு சந்தைகளில் இருந்து தங்கத்திற்கு மாறி வருகின்றன. இதனால் கடந்த ஒன்பது நாட்களில் தங்கம் விலை, சவரனுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 240 ரூபாய் உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்