தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபம்

x

தை அமாவாசையை ஒட்டி, திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், பத்ர தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக, கோயில் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, தங்க விளக்கில் இருந்து சுடர் எடுத்து வரப்பட்டு, கோயில் தங்க கொடிமரம் முன்பு 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த நந்தி விளக்கு ஏற்றப்பட்டு, பத்ர தீப விழா நடைபெற்றது.

பின்னர், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலை சுற்றி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்வில், பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்