கர்ப்பிணிகளுக்கு சந்தனம், வளையல் - களைகட்டிய வளைகாப்பு விழா

x

சின்னாளபட்டி, திரு.வி.க.நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு வளைகாப்பு நடைபெற்றது. இதில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்பட்ட வளைகாப்பில் 7 வகையான சாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம் வைத்து வளையலும் அணிவித்தனர். மேலும், வழிபாடு செய்ய வந்த அனைவருக்கும் தாலிக்கயிறு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் உட்பட 7 வகை சாதங்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்