விசிக நிர்வாகி மீது பாமக பெண் நிர்வாகி புகார்

x

மேட்டூரை அடுத்த கொளத்தூர் காவல் நிலையத்தில், விசிக நிர்வாகிகள் மீது பாமக பெண் நிர்வாகி மீரா, புகார் மனு கொடுத்துள்ளார். அதில், இரு தினங்களுக்கு முன் தனது உறவினர்களுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கிழக்கு காவிரிபுரத்தைச் சேர்ந்த விசிக நிர்வாகி இளையராஜா, நவீன், சசி, முருகன் ஆகிய 4 பேரும் தன்னுடன் வந்த மூன்று பெண்களையும் ஆபாச வார்த்தைகளால் கேலி செய்து, தாங்கள் அணிந்திருந்த 2 கிராம் மோதிரத்தை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், குழந்தைகள் நல மையத்தின் பூட்டை உடைத்து இளையராஜா கூட்டம் நடத்தியதாக பழனி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்