குழந்தைகளின் கண் முன்னே தந்தையைக் குத்திக் கொல்ல முயற்சி - வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

x

சென்னை ஆட்டோவில் குழந்தை விளையாடியது தொடர்பான தகராறில், கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் தெருவில், சரவணன் என்பவர் தனது ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டித்துள்ளார். அவரிடம் குழந்தையின் தந்தை குமார் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் குமாரை சரவணன் கத்தியால் குத்தியதில், குமார் காயமடைந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


Next Story

மேலும் செய்திகள்