திருவண்ணாமலையை அதிரவைத்த ஏடிஎம் கொள்ளை - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் நுழைந்த கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை தண்டராம்பட்டு தேனிமலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு, டாட்டா சுமோ காரில் வந்து இறங்கி இரண்டு கொள்ளையர்கள், ஏடிஎம் மையத்துக்கு உள்ளே சென்று கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்