#Breaking|| தடுப்பூசி செலுத்திய பின் மூச்சுத்திணறல்.. திருச்சி தனியார் காப்பகத்தில் 2 குழந்தைகள் பலி

x
  • திருச்சி காப்பகத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு
  • திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
  • கடந்த 30-ஆம் தேதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய பின் மூச்சு திணறல் ஏற்பட்டது
  • ஒரு வயதுக்கும் குறைவான 20 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய நிலையில், அதில் 8 குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு
  • அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அதில் 2 குழந்தைகள் நேற்று இரவு உயிரிழப்பு
  • கடந்த சில மாதங்களில் இதே காப்பகத்தில் 3 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது
  • கடந்த 30ஆம் தேதி காப்பகத்தில் உள்ள மூன்று மாதம் முதல் ஒன்பது மாத வரையிலான 20 பச்சிளம் குழந்தைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது இதை எடுத்து அடுத்த சில மணி நேரங்களில் 2 ஆண் குழந்தை மற்றும் 6 பெண் குழந்தைகளுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது..
  • இதை அடுத்து உடனடியாக காப்பக பணியாளர்கள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்...
  • சிகிச்சையில் இருந்த 8 குழந்தைகளில் 2 குழந்தைகள் சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..
  • மீதமுள்ள 6 குழந்தைகள் சிகிச்சையில் இருந்த நிலையில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்