இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பு | electioncommissioner
இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார். அண்மையில் வி.ஆர்.எஸ் பெற்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அருண் கோயல் தற்போது இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story