ஆயுத வியாபாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... பேஸ்புக் லைவ்வில் வீடியோ பதிவு செய்தபடி தற்கொலை

x

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா பகுதியை சேர்ந்தவர் ஆயுத வியாபாரி நந்த் லால் குப்தா.

பேஸ்புக் லைவ்வில் வீடியோ பதிவிட்ட படி, நந்த்லால் குப்தா, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தற்கொலை செய்வதற்கு முன், பேஸ்புக் லைவ்வில் பேசிய நந்த்லால் குப்தா, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நந்த்லால் குப்தா, கந்துவட்டி கொடுமையால் மன உளைச்சலில், தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்