ஆட்டம் காட்டும் அரிக்கொம்பன் - களத்தில் குதித்த கும்கி

x

தேனி மாவட்டம் கம்பத்தில், கும்கி யானைகளை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முத்து, உதயன், சுயம்பு ஆகிய கும்கி யானைகளை அமைச்சர் பார்வையிட்டு, அதன் நிலவரம் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமேஷ் பிரவீன் டோங்கிரே மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். யானை அரிக்கொம்பன் ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டுவிட முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்